பதுளை, நேப்பியர் கிராமத்திற்கு புதிதாக வெட்டப்பட்ட வீதிக்கு கொங்கிறீட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதேச மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் கடந்த பெப்ரவரி மாதம் புதிய வீதியொன்று வெட்டப்பட்டதுடன், அதற்கு கொங்கிறீட் இடும் பணிகளுக்காக ஹாலி-எல பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.பிரேமதாச நிதி ஒதுக்கீடு மேற்கொண்டிருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக இந்த பணிகளை உரியவாறு முன்னெடுக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது கொங்கிறீட் இடுவதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வில் ஹாலி-எல பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.பிரேமதாச கலந்துகொண்டு பணியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். நேப்பியர் தோட்ட பொதுமக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நேப்பியர் என்ற கிராமமானது பதுளை நகருக்குச் செல்லும் வழியில் காணப்படும் ஆறாம் கட்டை என்ற இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றக்கு அப்பால் அமைந்துள்ளது. இங்குள்ள குறுக்குப்பாதை குன்றும் குழியுமாகி படிக்கட்டுகளில் காணப்படும் கற்கள் உருண்டு மக்கள் பயணிக்க முடியாத நிலையிமையில் காணப்பட்டது.
புனரமைப்பு இல்லாதததால் பகலில் பாம்புகள், இரவில் பன்றிகள் என மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது. வேலை முடிந்து வீடு வருவோர், மிருகங்களுக்கு பயந்து முச்சக்கர வண்டிக்கு அதிக வாடகை செலுத்தி வீடு போய்ச் சேரும் நிலை இருந்துவந்தது.
எனினும், தற்போது 150 ரூபாய் செலுத்தி இந்த புதிய வீதி ஊடாகப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடையாக செல்வோருக்கும் நேரத்தை மிகுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த வீதி பயன்மிக்கதாக அமைந்துள்ளதுடன், கொங்கிறீட் இட்டு வீதி முழுயாக்கப்படும் பட்சத்தில் ஏனைய வாகனங்களும் அந்த வீதியால் இலகுவாகப் பயணிக்க முடியும் என்று நேப்பியர் மக்கள் மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

إرسال تعليق