பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 05 ஆம் திகதி.!

பொதுத் தேர்தலை ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஏகமனதாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய அறிவித்துள்ளார்.


பொதுத் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி இன்று (10-06-2020) நள்ளிரவு வௌியாகும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post