புத்த ​பெருமானின் பரிநிர்வாணமடைந்த உத்தர பிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அக்டோபர் 20 ஆம் தேதி திறந்து வைத்தார். 

இந்த விமான நிலையம் பெளத்த மதத்தவரது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் அங்குரார்ப்பண விழாவானது  இன்று இடம்பெற்றது.

இலங்கையில் இருந்து புறப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் மற்றும் 12 முக்கிய பிரமுகர்களுடன் புத்தரின்  புனித நினைவுச் சின்னங்களை கொண்டு சென்ற விமானம் .தரையிறங்கியதன் மூலம் குஷிநகர் விமான நிலையம் இயங்க ஆரம்பித்துள்ளது.

புராதன நகரமான குஷிநகர் கெளதம புத்தரின் இறுதி ஓய்வு இடமாகும், அங்கு அவர் இறந்த பிறகு மஹாபரிநிர்வாணம் அடைந்தார்.

இந்த நிகழ்வின் விசேட அம்சமாக,  இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2500 வருடங்களாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக, பாரத தேசம் இந்த உலகிற்கு தந்த மிகப் புனிதமான நூலான பகவத்கீதை வெளியீட்டின் முதற் பிரதி, இலங்கயின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவால் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு வெளியீடு செய்துவைக்கப்பட்டது. 

இலங்கை பிரதமர், மஹிந்த ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பகவத்கீதை என்னும் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது.

இலங்கையில் வாழுகின்ற அனைத்து மதத்தவர்களும் அறியும் வகையில் பகவத்கீதையில் அமைந்த சமஸ்கிருத சுலோகங்களை, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறியும் வண்ணம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. (kandytamilnews.com)

Post a Comment

Previous Post Next Post