சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 18 பேரை திருகோணமலை, சித்தாரு பகுதியில் இலங்ககை இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் மணல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் படகுகளையும் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 18 பேருடன், அவர்கள் பயன்படுத்திய 3 டிரக் வண்டிகள், 4 படகுககள் உட்பட மணல் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களை இராணுவ விசேட பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.




Post a Comment

Previous Post Next Post