கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நோயாளர்களில் மேலும் நால்வர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்த நால்வரும் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 வரை அதிகரித்துள்ளது.

மேலும் 135 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post